Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:48 IST)
எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறியப்பட்ட துரை செந்தில்குமார் , சூரியை வைத்து இயக்கிய கருடன் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே அவர் விஷாலுக்கு  துரை செந்தில்குமாருக்கும் தனித்தனியாக அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து துரை செந்தில் குமார் அடுத்து விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’ என்ற தலைப்பில் உருவாக இருந்த கதையைதான் தற்போது மாற்றங்கள் செய்து உருவாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனைதான் திருமணம் செய்திருப்பேன்… பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகை நஸ்ரியாவுக்கு மனநிலை கோளாறா? மன்னிப்பு கேட்டு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments