Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

vinoth
புதன், 29 மே 2024 (08:39 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்தாலும் இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருப்பதே ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் 13 ஆம் தேதி ரிலீஸாக இருந்த ராயன் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அந்த தேதியில் மகாராஜா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர விருக்கும்'கடம்பான்பாறை'!

சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் "சீரன்" திரைப்படம்!!

பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" திரைப்படம் - பூஜையுடன் துவங்கியது!!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments