Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி வழக்கு: என்ன காரணம்?

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி வழக்கு: என்ன காரணம்?
, திங்கள், 3 ஜனவரி 2022 (19:05 IST)
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைசூரில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகவும், மகாகவிதான்  தன்னை தாக்கியதாகவும் விஜய்சேதுபதி மற்றும் மகாகவி ஆகிய இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினார்கள்.
 
இந்த நிலையில் மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் மீது மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது
 
இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’காத்துவாக்குல ரெண்டு காதல்: ‘நான் பிழை’ பாடல் ரிலீஸ்!