Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மறப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா !

Advertiesment
Vijay laughed
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:48 IST)
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷி, வாலி போன்ற படங்களை இயக்கிவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கி இசையமைத்திருந்த இசை படத்திலிருந்து முழுநேர நடிகராகிவிட்டார்.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருகிறார்.

இப்படத்தின் டிரெயிலர்   வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த  டிரெயிலரின் ஒரு மனுஷன் எவ்வளவு  கஷ்டப்படுவான் என் என்ற டயலாக்கை பேசியதைக் கேட்டு ரசித்த விஜய் என்னை அழைத்து பராட்டி அதைச் சொல்லிச் சிரித்ததாகக் கூறியுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்!