Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலை உடைத்துக் கொண்ட விஜய் பட நடிகை .. ரசிகர்கள் அதிர்ச்சி

shilpa shetty
, புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:50 IST)
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பு தளத்தில் காலில் கட்டுப் போட்டு வீல் சேரில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகவும்,  குஷி படத்தில் மெகொரிபா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளவர் ஷில்பா ஷெட்டி. இவர், சினிமாவில் முன்னணி நடிகையும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான  ஷில்பா ஷெட்டி தற்போது இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடர்ல் நடித்து வருகிறார்.

இந்த வெப்தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டீங்கின் போது, இன்று ஷில்பா ஷெட்டின் தன் காலில் கட்டுப் போட்டிருந்தார்.

இதைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  நான் என் காலை உடைத்துக் கொண்டேன்.  அதனால்  இன்னும் 6 வாரங்களுக்கு என்னால் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது. எனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்   என்று தெரிவித்துள்ளார்.

 நடிகை ஷில்பா ஷெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகளும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'' இப்படம் அவசியம்'' - சூப்பர் ஸ்டார் படத்தைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்