Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெடிக்கல் மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுக்கொடுங்கள்! பிரபல நடிகர் கோரிக்கை!

மெடிக்கல் மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுக்கொடுங்கள்! பிரபல நடிகர் கோரிக்கை!
, புதன், 8 ஏப்ரல் 2020 (08:12 IST)
தென்னிந்திய மொழிகளில் வளரும் நட்சத்திரமாக இருக்கும் விஜய் தேவாரகொண்டா மருத்துவர்களுக்காக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வரும் விஜய் தேவாரகொண்டா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வளரும் நட்சத்திரமாக அறியப்படுபவர். நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அவர் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் விடுத்துள்ளார்.

அதில் ‘என் பிரியத்துக்குரியவர்களே… அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். துணிகளால் செய்த மாஸ்க்குகளே கூட இந்த வைரஸ் தொற்று பரவுவதில் உதவும் என நினைக்கிறேன். அதனால் மருத்துவ மாஸ்க்குகளை மருத்துவர்களுக்காக விட்டுவிடுங்கள். வெறும் கர்ச்சீஃப், துணி  அல்லது துப்பட்டாவால் செய்த மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். ’ எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பீதியால் மக்கள் தேவைகளை விட அதிகமாக N95 போன்ற மாஸ்க்குகளை அதிகளவில் வாங்குவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மாஸ்க்குகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்!