Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாட்சித் தேர்தலில் தள்ளுமுள்ளு- மன்னிப்புக் கேட்ட நடிகர் விஜய்!

உள்ளாட்சித் தேர்தலில் தள்ளுமுள்ளு- மன்னிப்புக் கேட்ட நடிகர் விஜய்!
, சனி, 19 பிப்ரவரி 2022 (09:53 IST)
நடிகர் விஜய் வந்து வாக்களித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கிய நிலையில் நடிகர் விஜய் சற்று முன் தனது வாக்கை பதிவு செய்தார். இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த நிலையில் நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வருகை தந்தார்.

அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்து நிலையில் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் அவர் வாக்கை செலுத்த உதவினர். இதனால் வாக்களிக்க வந்த சில பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அவர்கள் விஜய் திரும்பி செல்லும் போது இதுபற்றி ஆதங்கத்தை வெளிப்படுத்த அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் மோசடியில் சிக்கிய சன்னி லியோன்! – ரசிகர்கள் அதிர்ச்சி!