Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஆண்டனியின் கொலை…. நிறைவடைந்தது படப்பிடிப்பு!

விஜய் ஆண்டனியின் கொலை…. நிறைவடைந்தது படப்பிடிப்பு!
, சனி, 22 ஜனவரி 2022 (15:25 IST)
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை என்ற படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த எல்லா படங்களையும் விட அவர் நடித்து முடித்துள்ள கொலை என்ற திரைப்படம் இப்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியோடு ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசையமைப்பாளரைக் கண்டுபிடித்தால் தங்க காசு பரிசு… அறிவித்த தயாரிப்பாளர்!