Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெங்கட் பிரபு & நாக சைதன்யா இணையும் புதிய படம்… படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!

வெங்கட் பிரபு & நாக சைதன்யா இணையும் புதிய படம்… படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!
, புதன், 25 மே 2022 (16:23 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்துக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கிய அடல்ட் காமெடி படமான மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

அதையடுத்து நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரகத நாணயம் இயக்குனரோடு கைகோர்த்த ஹிப் ஹாப் ஆதி… வெளியான டைட்டில்!