Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவுக்குக் கதை சொல்லிய வசந்தபாலன்… டேக் ஆஃப் ஆகுமா?

சூர்யாவுக்குக் கதை சொல்லிய வசந்தபாலன்… டேக் ஆஃப் ஆகுமா?
, வியாழன், 11 மார்ச் 2021 (07:50 IST)
இயக்குனர் வசந்தபாலன் சூர்யாவுக்காக ஒரு வரலாற்றுக் கதையை சொல்லியுள்ளாராம்.

ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். அதன் பிறகு அவர் இயக்கிய வெயில் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஆனால் அதற்குப் பின்னர் அவர் இயக்கிய அரவான் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவர் இப்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அர்ஜுன் தாஸைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் இப்போது நடிகர் சூர்யாவுக்காக ஒரு வரலாற்றுக் கதையை  சொல்லியுள்ளாராம். சூர்யாவும் கதையைக் கேட்டு பாஸிட்டிவ்வான ரியாக்‌ஷன் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா இப்போது பாண்டிராஜ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிச்சைக்காரன் 2 இயக்குனர் திடீர் மாற்றம்… அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!