Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 22 March 2025
webdunia

ஒரு தியேட்டர்களில் கூட சூர்யா படத்தை வெளியிட முடியாது: வன்னியர் சங்கம் எச்சரிக்கை

Advertiesment
ஒரு தியேட்டர்களில் கூட சூர்யா படத்தை வெளியிட முடியாது: வன்னியர் சங்கம் எச்சரிக்கை
, புதன், 24 நவம்பர் 2021 (17:40 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தியேட்டரில் கூட சூர்யா படத்தை வெளியிட முடியாது என வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது என்பதும் இது குறித்து காரசாரமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் காவல்துறையிடம் சூர்யா மீது புகார் அளித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு தியேட்டரில் கூட சூர்யா படத்தை திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை செய்வதாக தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் பெற்றோருடன் விஷால்… கவனத்தை ஈர்த்த புகைப்படம்!