வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:49 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் எந்த காரணத்துக்காக அனுப்பி வைத்தாரோ, அந்த காரணத்தை நேற்று முதல் சரியாக செய்து வருகிறார் வனிதா. 
 
நேற்றைய ஓபன் நாமினேஷன் படலத்தின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை, கவின் தலைமையிலான அணியும் சும்மா விட்டுவிடவில்லை. நேற்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பயங்கரமான வாக்குவாதம் இன்றும் தொடர்கிறது 
 
இன்றைய முதல் புரமோ வீடியோவில் வாட் நான்சென்ஸ் பிக்பாஸ் என ஆத்திரமாக கூறிய வனிதா மைக்கை கட்டி தொங்க விடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேரனுக்கும் ஷெரினுக்கும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல தகுதி இல்லையா? என ஆவேசமாக பொங்குகிறார் வனிதா.
 
இந்த நிலையில் எமோஷனல் என்றால் என்னவென்று தெரியாத வனிதாவை நினைத்து பரிதாபப்படுவத? ஆத்திரப்படுவதா? என்று தெரியாமல் கவின் குழுவினர் உள்ளனர்.  இருப்பினும் வனிதாவுக்கும் கவின் குழுவினர்களுக்கும் இந்த வாரம் முழுவதும் பயங்கர பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments