Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: பார்வையாளருக்கு லாஸ்லியா பதில்!

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: பார்வையாளருக்கு லாஸ்லியா பதில்!
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (11:34 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் கேள்வி எழுப்பிகிறார். அவரது கேள்வி, ' 'சேரன் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்துள்ளார்.. நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசத்தை டிராமா என கவின் கூறியபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? என்று கேட்டார்.
 
இந்த கேள்விக்கு பதில் சொல்ல திணறிய லாஸ்லியா, 'நான் உண்மை எது? பொய் எது 
என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு நான் உண்மையாக இருக்கின்றேன். இதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறினார். அவர் இவ்வாறு கூறும்போது நாதழுதழுத்தது. பார்வையாளர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை லாஸ்லியா கூறாமல் இருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
 
லாஸ்லியாவை பொருத்தவரையில் சேரன், கவின் ஆகிய இருவரையும் முழு அளவில் நம்புகிறார். எனவே இருவரையும் அவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. எனவே ஒருவர் மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டும்போது அவர் கண்டுகொள்வதில்லை. இதுவே கவின், சேரன் குறித்து கூறியபோது அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபரில் மாமனிதன் – டபுள் ட்ரீட் கொடுக்கும் விஜய் சேதுபதி !