Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’வாணி ராணி’ சீரியல் நடிகர் மருத்துவமனையில் அனுமதி: கோமா என தகவல்!

’வாணி ராணி’ சீரியல் நடிகர் மருத்துவமனையில் அனுமதி: கோமா என தகவல்!
, வியாழன், 29 ஜூலை 2021 (08:10 IST)
’வாணி ராணி’ சீரியல் நடிகர் மருத்துவமனையில் அனுமதி: கோமா என தகவல்!
ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற தொடரில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் காரணமாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
ராதிகா நடித்த ’வாணி ராணி’ என்ற தொடரில் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நிமோனியா பாதிப்பால் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
அங்கு அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் இப்போது அவர் நினைவு திரும்புவார் என்று கூற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது,. நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதை அறிந்த சின்னத்திரை நடிகர்-நடிகைகள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்
 
வாணி ராணி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள வேணு அரவிந்த் ’பகல் நிலவு’ ’அந்த ஒரு நிமிடம்’ ’படிக்காத பண்ணையார்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி: உடற்பயிற்சி செய்யும்போது காயம் என தகவல்