Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை படப்பிடிப்பில் மீண்டும் தாமதம்… இந்த முறை அஜித் காரணம் இல்லை!

வலிமை படப்பிடிப்பில் மீண்டும் தாமதம்… இந்த முறை அஜித் காரணம் இல்லை!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (15:55 IST)
வலிமைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் தயாராக இருந்தாலும் சக நடிகர்கள் வராததால் படப்பிடிப்பு தள்ளி போயுள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது படக்குழு. இதையடுத்து நேற்று சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளது. ஆனால் அதில் அஜித் மற்றும் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லையாம். பேட்ச் வொர்க் என சொல்லப்படும் சிறு சிறு காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளாராம் வினோத்.

இந்நிலையில் அடுத்து அஜித் சம்மந்தமான காட்சிகளைப் படமாக்கலாம் என நினைத்த ஹெச் வினோத்துக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித்துடன் நடிக்க வேண்டிய வெளிநாட்டுக் கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டுகளால் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாம். அதனால் மீண்டும் வலிமை படப்பிடிப்பை தள்ளி வைக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’த்ரிஷ்யம் 2’ படப்ப்பிடிப்பில் மோகன்லால்-மீனா: வைரலாகும் புகைப்படம்!