காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், திமுக உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை வடிவில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் எங்கிருக்கிறது?
தெரிய வேண்டியதில்லை
அது இருக்கிறது
என்று தெரிந்தால் போதும்;
ஓர் இனத்தை அழிக்கிறது
என்று தெரிந்தால் போதும்
உலகப்படத்தில்
பாலஸ்தீனம் எங்கிருக்கிறது?
தெரியவேண்டியதில்லை
அது இருந்தும்
இல்லாமல் இருக்கிறது என்று
தெரிந்தால் போதும்
65ஆயிரம் மனிதர்களின்
உடல் உடைக்கப்பட்டு
உயிர் உருவப்பட்டிருகிறது
செய்துமுடிக்கப்பட்ட
ஒரு செயற்கைப் பஞ்சத்தால்
நர மாமிசம் உண்ணக்கூடப்
பல உடல்களில் சதைகள் இல்லை
முளைக்குச்சியில்
குத்திவைக்கப்பட்ட
மண்டை ஓடுகளாய்க்
குழந்தைகள்... குழந்தைகள்...
மனிதாபிமானமுள்ள யாருக்கும்
மனம் பதறவே செய்யும்
பாலைவனத்து மணலை அள்ளி
வாயில்போட்டு மெல்லும்
ஒரு சிறுவனைப் பார்த்து
நாற்காலிவிட்டு
நகர்ந்து எழுந்தேன்;
தாங்க முடியவில்லை
இந்த இனத் துயரம்
நிகழ்வதாக அறியப்படும்
ஐ.நாவின் எண்பதாம் அமர்வில்
இந்த நிர்மூலம்
நிறுத்தப்பட வேண்டும்;
உலக நாடுகள்
ஒத்துழைக்க வேண்டும்;
அமெரிக்கா
வீட்டோ அதிகாரத்துக்கு
விடுமுறை விடவேண்டும்
மிஸ்டர் நெதன்யாகு
கழற்றிவைத்த இதயத்தை எடுத்து
இருந்த இடத்தில்
இந்தியாவின் தெற்கிலிருந்து
ஈரல் நடுங்கும்