Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம்: ரஜினி குறித்து வைரமுத்து கவிதை

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று காமன் டிபி போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்ததை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஜினி குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நகலெடுக்க முடியாத 
உடல்மொழி
 
சூரியச் சுறுசுறுப்பு
 
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
 
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
 
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
 
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு
 
ரஜினிகாந்த் குறித்து வைரமுத்து பதிவு செய்துள்ள இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ரஜினி ரசிகர்கள் வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குடன் நன்றி தெரிவித்து ஒரு டுவிட்டை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments