Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது சுந்தர் சி & வடிவேலு நடிக்கும் படம்!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (17:32 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஏன் ஒரு சிறியப் படம் பண்ணவேண்டும் என சுந்தர் சி யோசிப்பதாகவும், அதனால்தான் இப்போதைக்கு கலகலப்பு 3 படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுந்தர் சி அடுத்து இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

அந்த படத்தில் தனது ஆஸ்தான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து இப்போது ஷூட்டிங்கே எளிமையாக தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உனக்கென்ன சத்யஜித்ரேன்னு நினைப்பா? தடைகளை தாண்டி சிறந்த இயக்குனர் விருதை வென்ற அனுபர்னா ராய்!

அப்பா ஸ்டாலின் அவர்களே… புகாரளித்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை… ஜாய் கிரிசில்டா ஆதங்கம்!

வேலை நாளில் குறையும் வசூல்… மதராஸி படத்தின் நான்காவது நாள் கலெக்‌ஷன் விவரம்!

26 வருடத்துக்கு மேடையில் பாடிய பாட்டு… இப்போது வைரலாகும் பாடகர் சத்யன் மகாலிங்கம்!

மகன் சூர்யா நடித்த ஃபீனிக்ஸ் படத் தயாரிப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments