Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வடிவேலு & சுந்தர் சி!

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வடிவேலு & சுந்தர் சி!

vinoth

, சனி, 20 ஜூலை 2024 (10:11 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரண்மனை 4 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஏன் ஒரு சிறியப் படம் பண்ணவேண்டும் என சுந்தர் சி யோசிப்பதாகவும், அதனால்தான் இப்போதைக்கு கலகலப்பு 3 படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சுந்தர் சி அடுத்து இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

அந்த படத்தில் தனது ஆஸ்தான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலுவை நடிக்க வைக்கவுள்ளாராம். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் நகரம் திரைப்படம்தான். அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரெய்ன் படத்தின் நான்கு பாடல்களையும் தானே பாடிய மிஷ்கின்!