Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் வடிவேலு சுந்தர் சி காம்போ – இந்த படத்தின் பார்ட் 2 தான்!

மீண்டும் இணையும் வடிவேலு சுந்தர் சி காம்போ – இந்த படத்தின் பார்ட் 2 தான்!
, வெள்ளி, 26 ஜூன் 2020 (08:05 IST)
வடிவேலுவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி யுடன் விரைவில் உருவாக இருக்கும் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்த படங்களாக வின்னர், கிரி, தலைநகரம் ஆகிய படங்கள் முக்கியமானவை. அந்த படங்கலில் நடித்த கைப்புள்ள, வீரபாகு மற்றும் நாய் சேகர் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இந்த படங்களில் எல்லாம் இயக்குனர் சுந்தர் சி க்கு முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் இருவரின் காம்போவில் கடைசியா வந்த நகரம் படம் வெற்றி பெறாவிட்டாலும், வடிவேலு நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன.

இந்நிலையில் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்பினேஷன் மீண்டும் இணைய உள்ளது. அவர்களின் ஹிட் படமான தலைநகரம் படத்தின் மூன்றாம் பாகம் தலைநகரம் 2 என்ற பெயரில் உருவாக இருக்கிறது. அதில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முகவரி, நேபாளி மற்றும் 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படத்தை இயக்கிய வி இசட் தொரை இயக்க இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்டாக் பிரபலம் சியா கக்கார் தற்கொலை – அடுத்தடுத்து நிகழும் சோகம்!