சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டுவெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான மத கஜ ராஜா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது மூக்குத்தி அம்மன் 2 பட வேலைகளில் சுந்தர் சி பிஸியாக உள்ளார்.
இதற்கிடையில் கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவிக்கவுள்ளதாக படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.