Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

Advertiesment
விஷாலின் சம்பளப் பிரச்சனையால் கைவிடப்பட்டதா சுந்தர் சி படம்?

vinoth

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:45 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவ பொங்கலுக்கு ரிலீஸான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா முதலிடம் பிடித்தது. 50 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக வசூல் செய்து கலக்கியது.

இந்நிலையில் இந்த வெற்றியை அறுவடை செய்யும் பொருட்டு உடனடியாக விஷால் சுந்தர் சி கூட்டணியில் ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த படத்தில் நடிக்க விஷால் அதிக சம்பளம் கேட்டதால் இப்போதைக்கு அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சுந்தர் சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் கம்பேக் கொடுக்க சரியான நேரம்.. 90ஸ் கார்ஜியஸ் ரம்பா கொடுத்த அப்டேட்!