Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்
, ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:12 IST)
பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரியோ, ரம்யா பாண்டியன், கிரண், சஞ்சனா, புகழ், ரக்சன், உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா பாசிட்ட்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பத்தாம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றும், ஒரு வாரம் கழித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்களை நியமனம் செய்யவும் பிக்பாஸ் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் திட்டமிட்டபடி அக்டோபர் 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒத்தாசைக்கு ஒத்த செருப்ப யூஸ் பண்ணுங்க! – சூர்யாவை அடிக்க பார்த்திபன் ப்ளானா?