Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிரஞ்சீவி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய த்ரிஷா

சிரஞ்சீவி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய த்ரிஷா
, வெள்ளி, 13 மார்ச் 2020 (20:56 IST)
சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து த்ரிஷாவிலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தன்னுடைய கேரக்டரை கூறியபடி படமாக்கப்படவில்லை என்பதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
 
சிரஞ்சீவி படத்திலிருந்துதான் வருத்தத்துடன் விலகுவதாகவும் இருப்பினும் தெலுங்கு ஆடியன்ஸ்களை மிக விரைவில் ஒரு நல்ல படத்தில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆச்சார்யா படத்திலிருந்து த்ரிஷா விலகியதை அடுத்து இந்த படத்தை வேறு ஒரு முன்னணி நடிகையிடம் படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே நடிகை த்ரிஷா, ‘சாமி 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் பின்னர் தன்னுடைய கேரக்டர் டம்மி செய்யப்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவலுடன் எதிர்பார்த்த KGF-2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ!