Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண், பெண் குரலில் அற்புதமாக பாடி அசத்தும் திருநங்கை !

ஆண், பெண் குரலில் அற்புதமாக பாடி அசத்தும் திருநங்கை  !
, புதன், 3 ஏப்ரல் 2019 (18:25 IST)
ஆண், பெண் குரலில் பாடி அனைவரையும் பிரமிக்க வைக்கும் திருங்கை சக்திக்கு மக்கள் மத்தியில் அமோக  வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 

 
சமீப நாட்களாக திருநங்கை ஒருவர் மெல்லலிய பெண் குரலில் அற்புதமாக பாடி அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளையடித்துள்ளதை  பற்றி சமூகவலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறார். மேலும் இவர் டிக் டாக்கில் பெரும் பிரபமடைந்துள்ளார்.
 
சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் "சிங்கிங் ஸ்டார்ஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்று அற்புதமாக பாடி தன் திறமையை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். மேலும் இவர் பிரபல பாடகர்களான எஸ்.பி . பாலசுப்ரமணியம், ஸ்ரேயா கோஷல் , ஏசுதாஸ்,  சின்மயி உள்ளிட்ட பாடகர்களின் குரலை போன்றும் பாடி அசத்துகிறார்.
 
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் தனது 14 வது வயதில் இருந்தே பாட ஆரம்பித்துவிட்டார். அழகான தமிழ் மொழியில் பாடி அனைவரையும் கவர்ந்து வரும் இவரின் திறமைக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு அவரை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்: விஜய் எப்படி ஒத்துக்கிட்டாரு..?