Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்தப்படம் எடுக்கின்றார் கீர்த்தி சுரேஷ்: ‘மாரி 2’ நடிகர் தான் ஹீரோ!

சொந்தப்படம் எடுக்கின்றார் கீர்த்தி சுரேஷ்: ‘மாரி 2’ நடிகர் தான் ஹீரோ!
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:40 IST)
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த திரைப்படம் தயாரிக்க உள்ள நிலையில் அந்த திரைப்படத்தில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சொந்தப்படம் எடுக்க உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை அவரது சகோதரி ரேவதி மேற்பார்வை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாஷி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  இவர் மாரி 2 உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி