Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் லாக்டவுன்… மீண்டும் தள்ளிப்போன துப்பறிவாளன் 2 ஷூட்டிங்!

லண்டனில் லாக்டவுன்… மீண்டும் தள்ளிப்போன துப்பறிவாளன் 2 ஷூட்டிங்!
, வியாழன், 30 டிசம்பர் 2021 (15:19 IST)
விஷால் எப்படியாவது துப்பறிவாளன் 2 படத்தை முடித்துவிட வேண்டும் என திட்டம் போட்டாலும் அது தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் விஷால் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இங்கிருந்து சென்று படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாம். அதனால் மறுபடியும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்திர குத்திருவாங்க… ரூட்டை மாற்றிய ராக்கி ஹீரோ!