Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (13:32 IST)
விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு தொடரும் தனித்துவமான கதைக்களங்களுடன், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வால் விஜய் டிவியின் சீரியல்களின் ரசிகர்கள் வரிசை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இசை, நடிப்பு மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றில் சிறந்த தரத்தை வைக்கும் இந்த புதிய தொடர்கள், இல்லத்தரசிகளோடு மட்டுமின்றி இளம் தலைமுறையினரிடையிலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது தெரிந்ததே. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை', 'பாக்கியலட்சுமி', 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' போன்ற தொடர்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
 
இதனையடுத்து, டிஆர்பி மதிப்பெண்களை மேலும் உயர்த்தும் நோக்கில்,  மூன்று புதிய தொடர்கள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. இந்த தொடர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
 
அதேபோல் கலர்ஸ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் 'சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்' தொடர் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், 'அதே கண்கள்' என்ற திகில் தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
 
மற்றொரு புதிய தொடர் 'தென்றலே மெல்ல பேசு' ஜூன் 9 முதல் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் வந்தனா மைக்கல் மற்றும் பல புதிய முகங்கள் நடிக்கின்றனர்.
 
இந்த புதிய தொடர்கள் விரைவில் ரசிகர்களை கவர்வதற்காக தயாராகி வருகின்றன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

நடிகைன்னா தொடணும்னு தப்பான நினைப்பு வருது! - நடிகை நித்யா மேனன் ஆதங்கம்!

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

அடுத்த கட்டுரையில்
Show comments