Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜல்லிக்கட்டு நடத்த இதை செய்தாலே போதும்: நடிகர் பார்த்திபன் ட்வீட்!

Advertiesment
ஜல்லிக்கட்டு நடத்த இதை செய்தாலே போதும்: நடிகர் பார்த்திபன் ட்வீட்!
, வியாழன், 19 ஜனவரி 2017 (11:56 IST)
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாணவர்கள்,  இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்  தொடர் அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய பாரம்பரிய வீர விளையாட்டை மீட்க  போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்க வேண்டிய அனைத்தும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது  என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

webdunia
 
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கு மத்திய அரசு தான் ஏதாவது செய்யவேண்டும் என்று  எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்க, நம்ம ஊர் பொது கிராம சபை நினைத்தாலே போதும் என்கிறார். ஜல்லிக்கட்டு சார்பாக  முடிவு எடுக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றினால்  அது உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற புது தகவலை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் இருக்க, வேறொரு நடிகருடன் குழந்தை பெற்ற நடிகை!