Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நா. முத்துக்குமார் மறைவுக்கு உண்மையான காரணம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபலம்!

நா. முத்துக்குமார் மறைவுக்கு உண்மையான காரணம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபலம்!
, வியாழன், 13 ஜூலை 2023 (16:55 IST)
பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் மிகப்பெரிய அளவில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.    
 
கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருதையும் வாங்கினார். தான் மறைந்தாலும் தன் பாலின் மூலமாக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நா முத்துக்குமார் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர், அவர் யாரிடமும் கோபப்பட்டு பேசவே மாட்டார். சின்ன சின்ன பட்ஜெட் படங்களுக்கு  கூட பாடல் எழுதி கொடுப்பார். 
 
அவர் மதுபோதைக்கு அடிமையாகி மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை.  நா முத்துக்குமார் இரவும் பகலும் கடுமையாக வேலை செய்து உடலை சரியாக பார்த்துக்கொள்ள தவறிவிட்டார். அது தான் அவரது மறைவுக்கு காரணம் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெத்தவங்க மேல பாசமே இல்லையா? பதிலடி கொடுத்த விஜய் - வைரலாகும் ட்வீட்!