Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான் வாழ்த்து

vairamuthu-stalin
, வியாழன், 13 ஜூலை 2023 (14:00 IST)
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சீமான் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து. இவர் பாரதிராஜாவின் நிழல்கள் என்ற படத்தில்  பொன்மாலை என்ற பாடலை எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர்,  பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி 7 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ளார். வைகரை மேகங்கள், திருத்தி எழுதி தீர்ப்புகள், தமிழாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் எழுதியுள்ளார்.

இன்று, கவிப்பேரரசு வைரமுத்துவின் 70 வது பிறந்த நாள். இவரது பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!

உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!''என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டிவிட்டர் பக்கத்தில்,

''ஒரு கிராமத்து பறவை
சில கடல்களைக் கடந்த கதைதான் நீ..

கேள்விகளால் வேள்வி செய்த
கவிதை நெருப்பு நீ..

கொஞ்சம் தேநீர் காட்டும்
நிறைய வானம் நீ..!

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் மீதிலும்
வெறப்புக்குப் பதில் காவி நிறத்தினும் ஒரு காதல் செய்தவன் நீ

என் ஐன்னலின் வழியே எப்போதும் கேட்கும்
இன்னொரு தேசிய கீதம் நீ..

கல்வெட்டுகளில் கவிதை வடித்தவர்கள் நடுவில்
மட்டும் கவிதைகளில் கல்வெட்டுகள் பதித்தவன்..!

மூன்றாம் உலகப்போர் புரிந்தாலும்
ஒரு போர்க்களத்தில் இரண்டு பூக்கள் தருபவன் நீ..

தமிழாற்றுபடையின் எல்லா நதியிலும் உன் ஒடம் மட்டும்..
தமிழ்நதி பாயும் உன் தண்ணீர் தேசம் முழுவதும்
பூக்கும் கவிதைப் பூக்கள் : ஆனால்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல..I

தமிழ்கவிதை பாற்கடல் நிரம்பி வழிய
பெய்யெனப் பெய்யும் மழை நீ..

உன் பழைய பனை ஓலைகளில்
நீ எழுதம் தமிழுக்கு நிறம் உண்டு எப்பொழுதும்..!

வடுகப்பட்டி முதல் வால்கா வரையிலும்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வடித்த
கவிச் சிற்பியே உன்னை வாழ்த்துகிறேன் என் வார்த்தை கொண்டு..!

பல்லாயிரம் ஆண்டுகால மரபு செய்யுட்பாக்கள்
உயிர் கொள்ளும் அடைகாப்பு..
நூற்றாண்டு கண்ட புதுக் கவிதைப்பூக்கள்
நடை பயிலும் குயில் தோப்பு..

மரபு கவிதை
விதிகள் மீறாமலும்
புதுக்கவிதை
மரபுகள் மாறாமலும்
திரையிசைப் பாடல்கள்
ஈன்று தரும்
இனிய யாப்பு...

கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி.
கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதிய
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்'' என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயில்சாமி இறந்ததும் குடும்பம் இப்படி ஆகிப்போச்சே.... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மருமகள்!