Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனால் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை !

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:10 IST)
போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகிச் சிறையில் உள்ள மகன ஆர்யன் கானால் சூப்பர் ஸ்டாr ஷாருக்கானுக்கு விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளதாகத் தெரிகிறது,

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 18 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இதையடுத்து மீண்டு அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸின் நீண்டநாள் விளம்பர தூதராகவும் அம்பாசிடராகவும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இருந்து வரும் நிலையில் அவரால் அந்நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்பட்டது, இதனால் அவருக்கு வருடம் தோறும் ரூ. 4 கோடி சம்பளம் கொடுக்கப்படு வந்தது. ஆனால் ஆர்யன் கான் விவகாரத்தில் ஷாருக்கான் நடித்துள்ள விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments