Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைரியமான கேரக்டரில் துணிந்து நடித்த நடிகர் !

தைரியமான கேரக்டரில் துணிந்து நடித்த நடிகர் !
, வெள்ளி, 30 ஜூலை 2021 (23:55 IST)
'நவரச' ஆந்தாலஜி படத்தில் நடித்தது குறித்து பிரபல நடிகர் அதர்வா மனம் திறந்துள்ளார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

மனித உணர்வுகள் - கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

தமிழின் பல முன்னனி, திரை ஆளுமைகள் இணைந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் தமிழ் திரைக்கு பெருமை சேர்க்கும் படைப்பாக ஒரு உன்னத தருணமாக நிகழவிருக்கிறது. இந்நிலையில்  நவரசா ஆந்தாலஜியில், துணிந்தவன் என்ற படத்தில், நடிகர் அதர்வா தைரியம் என்ற உணர்வை மையமாகக் கொண்ட கதையில் நடித்துள்ளார். இப்படத்தை சர்ஜூன் கே.எம் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அதர்வா, எனக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் எனவும், இப்படத்தில் நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு அதிகாரியாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஸ்பைடர் மேன்!