Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் அதிரடி ஆக்ஷன் எடுத்த தஞ்சை கலெக்டர்!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:20 IST)
மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்து சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜோதிகா தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான விளக்கமும் வரவில்லை என்றாலும் ஜோதிகாவுக்கு நெருக்கமான பல திரையுலக பிரபலங்கள் ஜோதிகா எந்த உள்நோக்கத்தோடும் இதனை  பேசவில்லை என்றும் அவர் பேசியது சரிதான் என்றும் கூறி அவருக்கு ஆதரவாக வருகின்றனர்.

ஜோதிகாவின் சர்ச்சையான பேச்சை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர்  கோவிந்தராவ்  கடந்த புதன்கிழமை`தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் விரைந்து சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். ஜோதிகா பேசியதை போன்று  மருத்துவமனையில் ஏதேனும் குறையிருந்தால் அதனை சரி செய்ய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments