ஞானவேல் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்… சத்யராஜுக்கு சென்ற வேடம்!

vinoth
சனி, 4 அக்டோபர் 2025 (12:40 IST)
தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் சரவண பவன் ராஜகோபாலுக்கு எதிராக வழக்கு நடத்திப் போராடிய ஜீவஜோதியின் வாழ்க்கையை ‘தோசா கிங்’ என்ற பெயரில் இயக்குனர் ஞானவேல் படமாக எடுக்கவுள்ளார். ஜீவஜோதி வழக்கு நடந்தபோது பத்திரிக்கையாளராக அந்த வழக்கை நேரில் பார்த்தவர் ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் சரவணபவன் அண்ணாச்சி வேடத்தில் நடிக்க மோகன்லாலிடம் ஞானவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தற்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் சத்யராஜ் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம் என்பது வதந்தியா? தெலுங்கு திரையுலகில் பரபரப்பு..!

கல்கி 2 தாமதம்… அடுத்த படத்தில் சாய் பல்லவியை இயக்கும் நாக் அஸ்வின்!

ஆன்லைனில் நிர்வாணப் படம் கேட்ட நபர்… மகளுக்கு நடந்த மோசமான சம்பவத்தைப் பகிர்ந்த அக்‌ஷய் குமார்!

மூன்றாவது நாளில் பெரும் சரிவை சந்தித்த தனுஷின் ‘இட்லி கடை’ பட வசூல்!

இரண்டாம் நாள் காந்தாரா-1 வசூல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments