Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா 46 பயோபிக் இல்லை.. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – இயக்குனர் வெங்கட் அட்லூரி!

Advertiesment
Surya

vinoth

, திங்கள், 30 ஜூன் 2025 (11:19 IST)
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்துக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு பயோபிக் படம் என்று தகவல்கள் பரவி வந்தன.

ஆனால் அதை இயக்குனர் வெங்கட் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “முதலில் சூர்யா சாருக்கு நான் ஒரு பயோபிக் கதையைதான் கூறினேன். ஆனால் அவர் பயோபிக் கதைகளில் நடிக்க ஆர்வமாக இல்லை. அதன் பின்னர் குடும்பத்தை மையப்படுத்தி ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு உடனே பிடித்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மனித உணர்வுகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியானக் குடும்ப கதையாக இருக்கும். இந்த படத்தில் சூர்யா சாரின் கதாபாத்திரம் சஞ்சய் ராமசாமி போன்ற ஒன்றாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி… இணையத்தில் வெளியான புகைப்படம்!