அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு தள்ளிப் போகும் சூர்யாவின் ‘கருப்பு’… காரணம் நெட்பிளிக்ஸா?

vinoth
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (08:25 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டீசர் வெளியாகிக் கவனம் பெற்றது. படத்தின் வேலைகள் முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படவில்லை. இதனால் பல ரிலீஸ் தேதிகளில் வரும் என யூகிக்கப்பட்ட இந்த படம் தற்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டுக்கான ஸ்லாட்டில்தான் ‘கருப்பு’ படத்தை வாங்க முடியும் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மனைவி இல்லாவிட்டால் ‘காந்தாரா’ படமே இல்லை: ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் மார்வெலஸ் க்ளிக்ஸ்!

சிவப்பு நிற உடையில் ஒய்யாரப் போஸில் அசத்தும் மாளவிகா மோகனன்!

41 குடும்பங்களுக்கும் விஜய் மகனாக இருக்க வேண்டும்… பிரபல நடிகர் கருத்து!

பிரேம்குமாரின் அடுத்த படம் ‘ஆவேஷம்’ போல இருக்கும்… தயாரிப்பாளர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments