பொங்கல் ரேஸில் மூன்றாவதாக இணைகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (11:15 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டீசர் வெளியாகிக் கவனம் பெற்றது. படத்தின் வேலைகள் முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தைப் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப் படக்குழு திட்ட்மிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments