Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் விறுவிறுப்பாக நடக்கும் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு!

சென்னையில் விறுவிறுப்பாக நடக்கும் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு!
, சனி, 17 டிசம்பர் 2022 (08:51 IST)
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமார் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக இந்த படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் அஞ்சலியின் புதிய வெப் தொடர்!