Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பை முடித்த சூர்யா 44 படக்குழுவினர்… பொங்கல் ரிலீஸா?

படப்பிடிப்பை முடித்த சூர்யா 44 படக்குழுவினர்… பொங்கல் ரிலீஸா?

vinoth

, திங்கள், 7 அக்டோபர் 2024 (07:34 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.

படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ மட்டும் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குகள் அந்தமான் மற்றும் கொடைக்கானல் பகுதியில் நடந்தன. இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஷூட்டிங் முடிந்துள்ள போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே வெளியேறும் போட்டியாளர்.. அதிரடி ஆரம்பம்..!