Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலா சூர்யா படத்தின் அடுத்த கட்டப்பிடிப்பு எப்போது?… முக்கிய மாற்றத்தை செய்த படக்குழு!

பாலா சூர்யா படத்தின் அடுத்த கட்டப்பிடிப்பு எப்போது?… முக்கிய மாற்றத்தை செய்த படக்குழு!
, சனி, 25 ஜூன் 2022 (15:33 IST)
பாலா இயக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்தது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவாவில் ஜூன் மாதமே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் கோவாவில் எடுக்க இருந்த காட்சிகளை இப்போது பாண்டிச்சேரியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூலை 15 ஆம் தேதி வாக்கில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2-வில் சர்ப்ரைஸாக இணையும் பிரபல ஹீரோ? லேட்டஸ்ட் தகவல்!