Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“பாலா அண்ணனின் உணர்வுகளுக்கு…” – வணங்கான் படத்தில் இருந்து 2டி நிறுவனமும் விலகல்!

“பாலா அண்ணனின் உணர்வுகளுக்கு…” – வணங்கான் படத்தில் இருந்து 2டி நிறுவனமும் விலகல்!
, திங்கள், 5 டிசம்பர் 2022 (09:35 IST)
இதுபற்றி நேற்று திடீரென இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் வெளியானது. அதில் “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. 

என் மீதும், இந்த கதையின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. 
எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் ” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது படத்தைத் தயாரிப்பதாக இருந்த 2 டி நிறுவனமும் அதில் இருந்து வெளியேறியுள்ளது. இது சம்மந்தமாக வெளியாகியுள்ள ட்வீட்டில் “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து  @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். #Vanangaan” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்திடம் அரசியல் பற்றி பேசினால் இதுதான் நடக்கும்… ஹெச் வினோத் தகவல்!