Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் படத்தில் மீண்டும் வில்லனாகும் மலையாள முன்னணி நடிகர்!

ஷங்கர் படத்தில் மீண்டும் வில்லனாகும் மலையாள முன்னணி நடிகர்!
, புதன், 27 அக்டோபர் 2021 (10:54 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் ராம்சரணைத் தவிர்த்து ஜெயராம், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதையடுத்து இப்போது வில்லனாக நடிக்க மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஷங்கரின் ஐ படத்தில் சுரேஷ் கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் பிளாஷ்பேக் காட்சிகள்… 25 நாளில் மொத்த படமும் முற்றும்!