Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்றாம் பாகத்தில் மொக்க வாங்கினாலும் பார்ட் 4 போகும் சுந்தர் சி… ஹீரோ யார் தெரியுமா?

மூன்றாம் பாகத்தில் மொக்க வாங்கினாலும் பார்ட் 4 போகும் சுந்தர் சி… ஹீரோ யார் தெரியுமா?
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:02 IST)
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அதையடுத்து பேய் படங்களுக்கு கேப் விட்டு பீல்குட் படமாக காபி வித் காதல் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் தனது பழைய ஹிட் படமான அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார்… அட யோகி பாபுவும் இருக்காரா?