Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி, விஜய்...அடுத்தது சூர்யா! அசுர பலத்துடன் சன் பிக்சர்ஸ் ரீஎன்ட்ரீ

ரஜினி, விஜய்...அடுத்தது சூர்யா! அசுர பலத்துடன் சன் பிக்சர்ஸ் ரீஎன்ட்ரீ
, ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (09:27 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் பட தயாரிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளது.

 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'பேட்ட', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. ரஜினி, விஜய் இருவருமே, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள், இவர்களது படங்களை வெளியிட்டு அசுர பலத்துடன் ரீஎன்ட்ரீ  ஆகிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது . அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. 
 
'எந்திரன்', 'பேட்ட' ஆகிய படங்களை தொடர்ந்து 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் ரஜினி நடிப்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி: மும்தாஜ் கண்ணீர்