Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு படத்துக்காக 50 கோடி ரூபாயில் செட்… வாரணாசியை ரி க்ரியேட் செய்யும் ராஜமௌலி!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (10:48 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

சமீபத்தில் ஒடிசாவில் சிலக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்துக்காக 50 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைக்கவுள்ளார் ராஜமௌலி. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் வாரணாசி நகரத்தை மறு உருவாக்கம் செய்யும் வகையில் இந்த செட் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘AK உடன் இனிய சந்திப்பு… அதைத் தவிர வேறு என்னப் பேச முடியும்?’ – யுவன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 ட்ரோல்களா உஷாரான சித்தார்த்.. 3BHK படத்தின் ப்ரமோஷனில் அடக்கி வாசிப்பு!

தன்னுடைய அடுத்த நாவலை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ… ரசிகர்கள் வாழ்த்து!

நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் பிடிக்கும்… ஆனால்?- தனுஷ் மனம்திறப்பு!

ரஜினி படத்தின் பாடல் வரியை மாற்ற மறுத்தேன்: வைரமுத்து

அடுத்த கட்டுரையில்
Show comments