Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி ஓரம்கட்டினார்கள்… மலையாள சினிமா குறித்து அனுபமா வருத்தம்!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (10:40 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அவரின் தாய் மொழியான மலையாளத்தில் அவர் பெரிதாகப் படங்கள் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தற்போது ‘ஜானகி வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஸ்டேட்” என்ற படத்தில் சுரேஷ் கோபியோடு இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மலையாள சினிமா தன்னை ஓரம்கட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதில் ”எனக்கு நடிக்கத் தெரியாது என்றார்கள். நிறைய ட்ரோல்கள் என் மீது வைக்கப்பட்டன.  உங்களுக்கு வேண்டுமானால் என்னை விமர்சித்துக் கொள்ளுங்கள். ஆனால் என் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். என்னை ஆதரித்தவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments