Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகேஷ் பாபு படத்துக்காக 50 கோடி ரூபாயில் செட்… வாரணாசியை ரி க்ரியேட் செய்யும் ராஜமௌலி!

Advertiesment
ராஜமௌலி

vinoth

, வியாழன், 19 ஜூன் 2025 (10:48 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

சமீபத்தில் ஒடிசாவில் சிலக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்துக்காக 50 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைக்கவுள்ளார் ராஜமௌலி. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் வாரணாசி நகரத்தை மறு உருவாக்கம் செய்யும் வகையில் இந்த செட் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி ஓரம்கட்டினார்கள்… மலையாள சினிமா குறித்து அனுபமா வருத்தம்!