Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

Advertiesment
Rajamouli

vinoth

, புதன், 30 ஏப்ரல் 2025 (09:50 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

இதையடுத்து ராஜமௌலி தன்னுடையக் கனவுப் படைப்பான மகாபாரதத்தைப் படமாக எடுக்கவேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நானி நடித்த படம் ஒன்றின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “என்னுடைய ‘மகாபாரதம்’ படத்தில் நானி கண்டிப்பாக நடிப்பார்” என உறுதியளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

VJS- பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்.. வெளியான தகவல்!