Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடும்... ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (19:36 IST)
ரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடுமாம். அதற்கான காரணத்தை ஸ்ரீதேவியே தெரிவித்துள்ளார்.

 
ஸ்ரீதேவி ஏற்கெனவே அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ரஜினி, கமல் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என் அம்மாவுடன் ரஜினி எப்போதுமே நட்பாக இருப்பார். என் அம்மாவுக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.
 
‘கமலைப் போல் பெரிய ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என ரஜினி என் அம்மாவிடம் கேட்டார். ‘கண்டிப்பாக நீ பெரிய ஸ்டாராக வருவாய்’ என்று அம்மா சொன்னார். ‘அப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்’ என ரஜினி சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.
 
அதுமட்டுமல்ல... ரஜினியும், ஸ்ரீதேவியும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 2011ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார் அல்லவா? அப்போது, அவர் குணமடைய வேண்டும் என்று ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. ரஜினிக்கு சாய்பாபாவைப் பிடிக்கும் என்பதால், ஒரு வாரம் கழித்து ஷீரடிக்குச் சென்று தன்னுடைய விரதத்தை நிறைவு செய்துள்ளார் ஸ்ரீதேவி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments